Wednesday, April 26, 2006

ஜகஜ்ஜால கில்லாடிகள் - III


ப்ளைவுட் விளம்பரம்ன்னாலே ரம்பமா இருக்கும்ங்கறத மாத்தி சூப்பரானா அட்வர்டைஸ்மென்ட் ஒண்ண க்ரீன்ப்ளை ப்ளைவுட்டுக்காக ஃபிலிம் பண்ணவங்கதான் பெங்களூரச் சேர்ந்த நிர்வாணா ஃபிலிம்ஸ், - ஸ்னேகா & ப்ரகாஷ் வர்மா.ஸ்னேகாதான் ப்ரொட்யூஸர், ப்ரகாஷ் டைரக்டர். இவங்க ரெண்டு பேருமே 'ட்ரெண்ட்ஸ்' விளம்பரப் பட கம்பெனியில பிரபல விளம்பர டைரக்டர் வி.கே.ப்ரகாஷ் கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டர்ஸா வேலை செஞ்சவங்க.சில வருஷங்களுக்கு முன்னாடி நிர்வாணா ஃபிலிம்ஸ தொடங்கி இப்ப சக்கை போடு போட்டுட்டு இருக்காங்க.

காரைக்குடியில ஒரு லோக்கல் பஸ்ஸுல அம்மா-அப்பாவோட போயிட்டிருக்குற ஒரு சர்தார்ஜி பையன் பழங்கால வீடு ஒண்ணுத்த பாத்ததுமே "வண்டி நிறுத்துங்க!!"ன்னு தமிழ்ல சொல்றான்.. அவனோட பேரண்ட்ஸ் 'இதென்ன புது பாஷை"ன்னு விழிக்க, அவன் அப்படியே இறங்கி, அந்த வீட்டுக்குள்ளாற போறான்..ஏதோ யோசிச்சுக்கிட்டே "என் வீடு! என் டேபிள்! என் சாவித்திரி" ன்னு ஒரு சின்ன மேஜையில 'சாவித்திரி'ன்னு எழுதியிருக்கிறத பாத்துகிட்டே சொல்லறான். வீட்டுக்குள்ள எல்லாரும் பேந்த பேந்த விழிக்க, ஃப்ளாஷ் பாக்குல கட் பண்ணா அந்த காலத்து ஜமீந்தார் லுக்கோட ஒரு இளைஞன் மேஜையில 'சாவித்திரி'ன்னு காதலோட எழுதிகிட்டு இருக்காரு. கட்-பேக் டு சின்ன பையன். அந்த வீட்டுல இருக்குற ஒரு செட்டிநாட்டுக் கிழவி "ஸ்வாமி! ஸ்வாமி!"ன்னு அந்த பையன்கிட்ட ஓடி வர்றா..அவனும் 'சாவித்திரி! சாவித்திரி' ன்னு பாட்டிய பாத்து உருகறான். கட் டு ஒரு பழங்கால தாத்தா ஃபோட்டோ-ஈஸி சேர்ல சாஞ்சபடி. கடைசி ஷாட்டுல சர்தார்ஜி பையனும், பாட்டியும் "சாவித்திரி! ஸ்வாமி" ன்னு உருகி உருகி சொல்லிகிட்டே இருக்காங்க. VO "க்ரீன்ப்ளை ப்ளைவுட்... ஜென்ம ஜென்மத்துக்கும் தொடரும் பந்தம்" ன்னு சொல்லி, படம் முடியுது. இருக்குற 30 (அ) 40 செகண்டுக்குள்ளாற கதையையும் சொல்லி, ப்ராடக்ட்ட நல்லா மக்கள் மனசுல பதிய வெக்கறது கஷ்டமான வேலைதான். இந்த ஃபிலிம்ல அந்த வேலைய ரொம்பவே சிறப்பா செஞ்சிருக்காங்க வர்மாஸ்.


ஹச் விளம்பரம் - ம்ம்ம்.. உங்க முகத்துல ஒரு wide smile தெரியுதே! பிரபல ஹச்- நாய் & பையன் விளம்பரத்துக்கு மயங்காதவங்க யாரு?"You and I.. in this beautiful world.. green grass, blue sky...in this beautiful world".அண்மையில காலமான ஓ&எம்-மின் க்ரீயேட்டிவ் டைரக்டர் வி.மகேஷோட கற்பனையில வளர்ந்த பையனுக்கும் நாய்க்கும் உயிர் கொடுத்தது வர்மாஸ்தான். இசை:ரூபர்ட். ஒளிப்பதிவு:டானி போப் .

நிர்வாணாவோட பாராஷுட் சம்பூர்ணாவும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது ஸ்கிரிப்டா, இல்ல படம் பண்ணப்பட்டவிதமா, மாடலோட எக்ஸ்ப்ரஷன்ஸான்னு pinpoint பண்ணி சொல்லத் தெரியல. overall, ஒரு கேஷுவல் அப்ரோச் இருக்கு இவங்க ஃபிலிம்ஸ்ல.

காஸ்டிங், காஸ்டிங் ன்னு நான் அடிக்கடி எழுதறேன்.கரெக்டான faces ஏன் முக்கியம்னு ப்ரகாஷ் சொல்லறத படிங்க... இங்க பாருங்க.

தொடங்கின மூணு வருஷத்துலயே இந்தியாவின் most sought after ஃபிலிம் மேக்கர்ஸ்ல ஒருத்தரா இருக்காரு ப்ரகாஷ். இவங்க ஷோரீல் உங்க பார்வைக்கு.

'கருப்பு மந்திரம்' பண்ணி ஒரு திரைப்படத்திற்காக பெஸ்ட் டெப்யூ டைரக்டருக்கான நேஷனல் அவார்டு வாங்கின பெங்காலி பாபுவை ஜ.கி IV-ல பாக்கலாமா?

1 Responses:

ambi said...

Another interesting post from u..
waiting for the next post. i'm getting jealous on the way of your writing style. "ithellam apdiye thaana varathu thaan illa?"